என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"

    • ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
    • கால்பந்து போட்டி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது.

    ஐதராபாத்தில் இன்று மாலை 7 பேர் பங்கேற்கும் காட்சி கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி விளையாடுகிறார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இதில் ஆடுகிறார்கள். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடைபெறும் இந்த போட்டியில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்.

    இதற்காக ராகுல்காந்தி இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.

    இன்றிரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அணியுடன் மெஸ்ஸியின் அணி நட்பு போட்டி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசின் யுடிஎஃப் மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது வணக்கங்கள். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

    செய்தி தெளிவாக உள்ளது: கேரளா, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, பதிலளித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை விரும்புகிறது.

    இப்போது எங்கள் கவனம் அசைக்க முடியாதது - கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாள்வது, மற்றும் வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர் மற்றும் தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.    

    • சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
    • இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.

    இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?
    • ராகுலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜகவுக்கு பிரியங்கா காந்தி பதிலடி

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.

    இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.

    அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

    பாஜகவின் விமர்சனங்களுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பிரதமர் மோடி தனது வேலை நாட்களில் பாதியை வெளிநாட்டு பயணங்களிலேயே கழிப்பவர். பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.

    இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.

    அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆனால், ராகுல் காந்தி வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர். பீகார் தேர்தலின்போதும் அவர் வெளிநாட்டிலும், பின்னர் வனச்சவாரியும் மேற்கொண்டார்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
    • காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும்.

    நேற்று மக்களவையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய ராகுல், நாட்டு மக்களுக்கும் ஜனநாயக நிறுவனங்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்று கனவு கண்ட காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடுத்த கட்டம் நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதாகும். இந்தியா 1.5 மில்லியன் இந்தியர்கள் தங்கள் வாக்குகள் மூலம் நெய்த துணியைப் போன்றது, வாக்குகள் இல்லாமல், இந்த நாட்டில் எந்த நிறுவனங்களும் இருக்காது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வருவதாக கூறினார்.

    ஆர்எஸ்எஸ் குறித்து ராகுலின் பேச்சைக் கேட்ட பாஜக வரிசை எம்பிக்கள் அவரை மேற்கொண்டு பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் தேவையில்லாததை பேசுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரித்தார்.  

    • பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
    • இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை.

    150 கோடி மக்களின் வாக்குகளை சேர்த்து பின்னப்பட்ட துணி தான் நமது இந்தியா.

    பல மதங்கள், பல சமுதாயங்கள், பல மொழிகளை கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்ததே நம் நாடு.

    பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கவேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் சட்ட விரோதமானது. அதை நிறுத்த வேண்டும்.

    தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து இந்தியாவின் தலைமை நீதிபதிஏன் நீக்கப்பட்டார்?

    நாட்டின் தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா?

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறிப்பிட்ட நபர்களை தேர்தல் ஆணையராக தீர்மானிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவித்தார்.

    • கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
    • தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கடந்த வாரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக, முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில், விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது:-

    * எல்லா சந்திப்புகளுக்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    * இட்லி, வடை, தோசை சாப்பிடுவது ஒரு சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.

    * த.வெ.க தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.

    * த.வெ.க.வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.

    * விஜயுடனான தனது சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் என்பது தவறு.

    * கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?

    * தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    * த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி என ஊடகங்கள் மட்டுமே பேசி வருவதாக கூறினார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
    • அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில் SIR குறித்த விவாதம் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்

    இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.

    காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.  

    • இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் நடக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

    இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.

    இந்நிலையில் இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விளைவு.

    அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண மக்கள் தான் விலை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் ஏகபோகங்கள் இல்லாமல் நேர்மையான போட்டிக்கு இந்தியா தகுதியானது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் இந்தியாவில் பல துறைகளில் ஏகபோகங்களுக்கு அரசு துணை புரிவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

      

    • இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை
    • சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருகிறார்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தநிலையில், இன்று 9 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோ திரும்பினார். இதனிடையே இன்றிரவு 7 மணிக்கு புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதநிலையில், எம்பி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதனை காங்கிரஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சொந்தக் கட்சியின் தலைவர்களே அழைக்கப்படாதபோது, தனக்கு வந்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "அழைப்பு அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைவரின் மனசாட்சிக்கும் ஒரு குரல் உண்டு. நமது தலைவர்கள் அழைக்கப்படாதபோது, நாம் அழைக்கப்பட்டிருந்தால், விளையாட்டு ஏன் விளையாடப்படுகிறது, யார் விளையாடுகிறார்கள், நாம் ஏன் அதில் பங்கேற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.  

    நேற்று, "இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

    • பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு பேசினார்.

    தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையனால் புத்துயிர் ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    ×